கையெழுத்தை வைத்தே போய் பேசுபவரை கண்டுப்பிடிக்கலாம்

21.01.2010

ஒருவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய் பேசுகிறாரா என்பதை அவரது கையெழுத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்று இஸ்ரேலைச் சேர்ந்த விஞ்ஞானி கில் லுரியா தெரிவித்துள்ளார். தனது நீண்டகால ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய் பேசுகிறாரா என்பதை கண்டறிய ஏற்கெனவே பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றின் மூலம் ஒருவரின் நேர்மை, நேர்மையின்மையை துல்லியமாகக் கண்டுபிடித்திட இயலாது. ஆனால் நான் கண்டுபிடித்துள்ள புதிய முறை மூலம் ஒருவரின் பேச்சின் நேர்மையை துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம் என்றும் கில் லுரியா கூறினார்.

ஒருவரது பேச்சின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழும்பட்சத்தில் அவரிடம் வெள்ளைத்தாளை அளித்து அதில் நிறையை வாசகங்களை எழுதுமாறு அவரை பணிக்க வேண்டும். அவ்வாறு எழுதும்போது அவர் எழுதும் விதம், எழுத்தின் அழகு உள்பட சில விஷயங்களை ஆராய்ந்தால் அவர் உண்மையை பேசுபவரா அல்லது புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுபவரா என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்று மேலும் லுரியா கூறினார்.

World News

Tags : Adiyakkamangalam - Iie detector using hand writing