செவ்வாய் பயணத்தில் கூடுதல் திட்டங்கள்
14.02.2010

2012-ல் மனிதர்களின் செவ்வாய் பயணம் தொடங்குகிறது. அங்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவான திட்டங்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அங்கு கடல் இருக்கிறது. எனவே உயிரினங்களும் வசிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு. இதற்கேற்ப செவ்வாய்ப் பயணத்தில் மேலும் சில வித்தியாசமான ஆய்வுகளை நடத்தவும் தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக நாசா ஆய்வு மையத்தில் உள்ள செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் (Mars Science Laboratory& MSL) பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு செவ்வாயில் இருந்து சேகரிக்கப்பட்டு வந்த பாறைகள், மணல்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. 2012ல் அங்கு விண்கலம் இறங்கியதும், விசேஷ ரோபோ உதவியுடன் மணல் பரப்பில் பல இடங்களிலும், பாறைகளை துளையிட்டு சில இடங்களிலும் மொத்தம் 72 விதங்களில் ஆய்வுக்குழாயில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அப்போது வெளிப்படும் வாயுக்களையும் சோதிக்கப்பட உள்ளது.
எவ்வாறு முலக்கூறுகள் உருவாகின்றன, அங்கு உயிர்க் காரணிகள் எதுவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஆய்வு பெரிதும் பயன்படும். உயிர்க் காரணிகளுக்கு கார்பன் ஆதாரமும் மிக அவசியமாகும். ஆனால் வெப்ப அளவுக்கு ஏற்ப கார்பன் இணைப்பு மாறுபடுவதால் அதற்கான சாத்தியக்கூறுகளிலும் வித்தியாசம் இருக்கும் என்பதால் அங்குள்ள சூழல் வெகுவாக கவனிக்கப்படுகிறது. கடந்த காலத்திலோ அல்லது தற்போதோ உயிரினங்கள் வசிப்பதற்கான தடயங்கள் உறுதி செய்யப்பட்டால், செவ்வாய் நிச்சயமாக மனிதர்கள் வாழ்வதற்கான சிறப்பு கிரகமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.