பழங்கால எஸ்கிமோ மனிதனை மீண்டும் உருவாக்கும் விஞ்ஞானம்

04.03.2010

விஞ்ஞானம் வியக்க வைக்கும் அளவில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் இன்னொரு மைல்கல்லாக மறைந்து போன பழங்கால மனிதர்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி மனித இனத்தில் 4 பிரிவுகள் இருந்துள்ளன. அவை பரவலாக அறியப்பட்ட எஸ்கிமோக்கள் மற்றும் நகனாசான்ஸ், கோர்யாக்ஸ், சக்சிஸ். இந்த இனங்கள் அனைத்தும் இப்போது இல்லை.

ஹோபன்கேகன் பல்கலைக்கழக நிபுணர்குழு, கிரீன்லாந்தின் பெர்மாபிராஸ்ட் பகுதியில் ஒரு எஸ்கிமோ மனிதனின் சடைபிடித்த கெட்டியான ரோமத் துண்டை தோண்டி எடுத்துள்ளனர். இதனை தீவிரமாக ஆராய்ந்ததில் பல்வேறு வியப்பூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இவர்கள் வாழ்ந்த காலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த மனித இனத்தின் கண்களும், ரோமங்களும் பழுப்பும், காவியும் கலந்த நிறமாக இருந்திருக்கிறது. உடல் தோற்பரப்பின் நிறமும் அறியப்பட்டு உள்ளது. ரோமங்கள் அடர்த்தியாக இருந்துள்ளது. அப்போதைய காலத்தில் தலை வழுக்கை இருந்திருக்காது என்று அறிய முடிகிறது.

இதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களைவிட கூடுதல் சிறப்பம்சமாக இதன் டி.என்.ஏ. வடிவமைப்பை வரைய முடிந்துள்ளது. இதனை வைத்து அப்போதைய மனிதர்களின் பழக்கவழக்கம் முதல் பல முக்கிய உண்மைகளை அறிய முடியும். இதை அடிப்படையாக வைத்து கணினியில் வரைபடம் வரையப்பட்டது. இதற்கு இனங்க் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன் மரபணு குறியீடு வரையறுக்கப்பட்டு எஸ்.என்.பி. என்னும் நவீன தொழில்ட்பம் முலம் அந்த நாட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள 3.5 லட்சம் பேரின் மரபணுவோடு ஒப்பிட்டு ஆய்வு நடந்து வருகிறது.

World News

Tags : Adiyakkamangalam - Scientists are trying to redevelop Eskimos