சமையல் / சிற்றுண்டி வகை |
|
பாம்பே சட்னி (Bombay Chutney)
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 2
தக்காளி:1
உருளைக்கிழங்கு:2
பச்சைமிளகாய்:5/6
கடலை பருப்பு: 1 பிடி
கடலை மாவு : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
கடுகு,உளுந்து : தாளிக்க
உப்பு தேவையான அளவு
மல்லி இலை
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் (1 inch நீளம்). பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் கடலை பருப்பையும்சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.
பச்சை மிளகாய் படபடப்பு அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.
5 நிமிடத்திற்கு பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும்.
கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
கொதி வந்தவுடன் கடலைமாவு தண்ணீரை உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.
5 நிமிடம் சென்றபின் கிளறி கொத்துமல்லி தூவி கிளறவும்.
இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
பெரிய வெங்காயம் : 2
தக்காளி:1
உருளைக்கிழங்கு:2
பச்சைமிளகாய்:5/6
கடலை பருப்பு: 1 பிடி
கடலை மாவு : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
கடுகு,உளுந்து : தாளிக்க
உப்பு தேவையான அளவு
மல்லி இலை
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் (1 inch நீளம்). பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் கடலை பருப்பையும்சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.
பச்சை மிளகாய் படபடப்பு அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.
5 நிமிடத்திற்கு பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும்.
கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
கொதி வந்தவுடன் கடலைமாவு தண்ணீரை உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.
5 நிமிடம் சென்றபின் கிளறி கொத்துமல்லி தூவி கிளறவும்.
இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.




