கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - ஆய்வறிக்கை
| 06.02.2012 |
|

பொதுவாக இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஒருவருக்கு கொட்டாவி ஏற்பட்டால் அது அவர் சோர்வாக இருப்பதை காட்டுவதாக நாம் நினைக்கிறோம், ஆனால் அது தவறு, கொட்டாவி பற்றி தீர ஆய்வு செய்து அறிந்துகொள்வதே சிறந்தது என்கிறார்கள் கொட்டாவி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப். வெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது.
ஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது. இம்முடிவின் அடிப்படையில், வெப்பமான சீதோஷ்ண நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உட்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.
கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ. மிக அதிகமான எண்ணிக்கையில் கொட்டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப். வெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது.
ஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது. இம்முடிவின் அடிப்படையில், வெப்பமான சீதோஷ்ண நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உட்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.
கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ. மிக அதிகமான எண்ணிக்கையில் கொட்டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
- ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சில வழி முறைகள்
- கிவி பழம் ஆஸ்துமா மற்றும் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும்
- மூலிகைகளும் கூந்தல் ஆரோக்கியமும்
- வெந்தயம் உடல் எடையை குறைக்கும்
- புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
- சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய்களை தவிர்க்கலாம்
- குளிர்ச்சி நிறைந்த வெள்ளரிக்காய் மூட்டு வலியை நீக்கும்
- ஸ்ட்ராபெர்ரியின் சிறப்பம்சங்கள்
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- பேரீச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்
- தக்காளி உடல் எடையை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- ஒன்பது மணிநேரம் தூங்கினால் உடல் எடை குறையும் - ஆய்வறிக்கை
- உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு - ஆய்வறிக்கை
- கடுகின் மருத்துவ குணங்கள்
- பீசா புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- காலிப்ளவர் இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை மறையச்செய்யும்
- ரோஜாபூவின் மருத்துவ குணங்கள்
- நடைப்பயிற்சி மன அழுத்ததை குறைக்கும்
- வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்
- நீரிழிவு நோயை தடுக்கும் கோவைக்காய்
- மாடிப்படியை உபயோகப்படுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம்
- உருளைக்கிழங்கு முகச் சுருக்கங்களை நீக்கும்
- வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
- அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறு
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- ஜாதிக்காயின் மருத்துவ பலன்கள்
- ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க சில வழிகள்
- அன்னாசி பழம் தொப்பையைக் குறைக்கும்
- இளநரையைப் போக்க சில வழிகள்
- வேப்ப இலை மற்றும் பூவின் மருத்துவ குணங்கள்
- ரத்த சோகையை கட்டுப்படுத்தும் சில உணவுகள் வகைகள்
- கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்
- ஏலக்காய் மன அழுத்தத்தை போக்கும்
- பால் பார்வை குறைபாட்டை சரிசெய்யும் - ஆய்வறிக்கை
- தர்பூசணி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- மஞ்சள் பார்க்கின்சன் எனப்படும் முடக்குவாதத்தை குணப்படுத்தும் - ஆய்வறிக்கை
- வெள்ளை நிற காய்கறிகள் இதயத்தை பலப்படுத்தும்
- உடல் புத்துணர்ச்சிக்கு தண்ணீர் சிகிச்சை சிறந்தது
- ஸ்ட்ராபெர்ரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
- அதிகம் மாட்டிறைச்சி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|














